தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி; ''ஒரு நாளைக்கு, 250 பேர் வீதம், 15 நாட்களுக்குள் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும்,' என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிர-பாகர் சதீஷ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் குறித்து, தமிழ்நாடு வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ் குமார் முன்-னிலை வகித்தார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது: கடந்த ஜூன் 22-ம் தேதி முதல், அரசு மருத்துவம-னைகளில் பிறந்த அனைத்து குழந்தை
களுக்கும், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் வரும், 25ம் தேதி துவங்குகிறது. ஜூன் 22- முதல் வரும், 24ம் தேதி வரை, அரசு மருத்துவமனை-களில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும், ஒரு நாளைக்கு, 250 பேர் வீதம், 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.
வரும், 25-ம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை பிறக்கும் அந்தந்த அரசு மருத்-துவமனைகளிலேயே தங்க மோதிரம் வழங்கப்-படும். குறிப்பிட்ட நாளில் தங்க மோதிரம் வாங்கி-வில்லை எனில், மீண்டும் ஒரு நாள் வந்து வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது. இதில், எஸ்.பி., அனிதா, டி.ஆர்.ஓ., மஞ்-சுளா, திட்ட இயக்குனர்கள் உமா மகேஸ்வரி, சுசீ-லாராணி உள்பட பலர்
பங்கேற்றனர்.