Crime, law and justice
தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
தூத்துக்குடியில் இன்ஸ்டாவில் பலருடன் பழகியதால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் | Husband strangles wife to death in Thoothukudi after she interacted with many people on Instagram

தூத்துக்குடியில் மனைவியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான ரெளடி, ‘இன்ஸ்டா’வில் பலருடன் பழகியதால் கழுத்தை நெரித்து ஓடையில் மூழ்கடித்துக் கொன்றேன் என, போலீஸாரின் விசாரணையில் கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி.
இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, பாளைங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரெளவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இவர் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து கீழநத்தத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாட்டில் தன் மனைவியுடன் ஆறுமுகப்பாண்டி குடியேறினார். இங்கு வந்தும் ஆறுமுகப்பாண்டியின் நடவடிக்கை மாறாததால் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை குளிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி முறப்பநாடு அருகேயுள்ள ஓர் ஓடைப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் ஆறுமுகப்பாண்டி.
அப்போது துண்டால் ஆறுமுகக்கனியின் கழுத்தை இறுக்கி, ஓடைத் தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதில், ஆறுமுகக்கனி உயிரிழந்தார். பின்னர் முறப்பாடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், “நான் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடிக்கடி சிறை சென்று வந்ததால் திருமணமானதில் இருந்தே எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நான் வீட்டில் இருக்கும்போதும், இல்லாமல் இருக்கும் நேரத்திலும் யாருடனோ போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தாள்.
இன்ஸ்டாகிராமிலும் சாட்டிங் செய்து கொண்டிருந்தாள். பலமுறை கண்டித்தும் அவள் கேட்கவில்லை. இது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது. பின்னர் அவளைச் சமாதானப்படுத்திவிட்டு ஓடையில் குளித்துவிட்டு வருவோம் எனக்கூறி அழைத்துச் சென்றேன். கழுத்தில் துண்டால் இறுக்கினேன். அவள் மயங்கியதும் ஓடையில் மூழ்கடித்துக் கொன்றேன்” என்றார்.
